606பெண் அவனை, ஆண் அவனை, பேடு ஆனானை,
        பிறப்பு இலியை, இறப்பு இலியை, பேரா வாணி
விண்ணவனை, விண்ணவர்க்கும் மேல் ஆனானை,
                வேதியனை, வேதத்தின் கீதம் பாடும்
பண்ணவனை, பண்ணில் வரு பயன் ஆனானை, பார்
           அவனை, பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம்
கண் அவனை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை,
                      கண் ஆரக் கண்டேன், நானே.