| 134 | நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி, நிரைவளையார் பலி பெய்ய நிறையும் கொண்டு, கொல் ஏறும் கொக்கரையும் கொடுகொட்டி(ய்)யும் குடமூக்கில் அங்கு ஒழிய, “குளிர் தண் பொய்கை நல்லாடை, நல்லூரே, தவிரேன்” என்று நறையூரில்- தாமும் தவிர்வார் போல, பொல்லாத வேடத்தர், பூதம் சூழ, “புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே!. |