14 | வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக, மழுவாள் கை ஏந்தி, மயானத்து ஆடி, சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலித் திரு வாஞ்சியத்தார்; திரு நள்ளாற்றார்; கார் ஏறு கண்டத்தார்; காமற் காய்ந்த கண் விளங்கு நெற்றியார்; கடல் நஞ்சு உண்டார்- போர் ஏறு தாம் ஏறிப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே. |