589 | பொங்கு ஆடு அரவு ஒன்று கையில் கொண்டு, போர் வெண்மழு ஏந்தி, போகா நிற்பர்; தங்கார் ஒரு இடத்தும், தம்மேல் ஆர்வம் தவிர்த்து அருளார்; “தத்துவத்தே நின்றேன்” என்பர்; எங்கே இவர் செய்கை? ஒன்று ஒன்று ஒவ்வா; என் கண்ணில் நின்று அகலா வேடம் காட்டி, மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே. |