80 | மனத்து அகத்தான்;தலைமேலான்;வாக்கின் உள்ளான்; வாய் ஆரத் தன் அடியே பாடும் தொண்டர்- இனத்து அகத்தான்;இமையவர்தம் சிரத்தின்மேலான்; ஏழ் அண்டத்து அப்பாலான்;இப் பால் செம்பொன் புனத்து அகத்தான்;நறுங்கொன்றைப் போதின் உள்ளான்; பொருப்பு இடையான்;நெருப்பு இடையான்;காற்றின் உள்ளான்; கனத்து அகத்தான்;கயிலாயத்து உச்சி உள்ளான் காளத்தியான் அவன், என் கண் உளானே. |