936 | நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய்; நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்; மன் ஆனாய்; மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்; மறை நான்கும் ஆனாய்; ஆறு அங்கம் ஆனாய்; பொன் ஆனாய்; மணி ஆனாய்; போகம் ஆனாய்; பூமிமேல் புகழ் தக்க பொருளே! உன்னை, “என் ஆனாய்! என் ஆனாய்!” என்னின் அல்லால், ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே?. |