6.14 திருநல்லூர்
திருத்தாண்டகம்
137நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்;
          நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்;
சினம் திருகு களிற்று உரிவைப் போர்வை வைத்தார்;
   செழு மதியின்தளிர் வைத்தார்; சிறந்து வானோர்-
இனம் துருவி, மணி மகுடத்து ஏற, துற்ற இன
     மலர்கள் போது அவிழ்ந்து மது வாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடி என் தலைமேல்
   வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.