142 | உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார்; உயிர் வைத்தார்; உயிர் செல்லும் கதிகள் வைத்தார்; மற்று அமரர்கணம் வைத்தார்; அமரர் காணாமறை வைத்தார்; குறைமதியம் வளர வைத்தார்; செற்றம் மலி ஆர்வமொடு காமலோபம் சிறவாத நெறி வைத்தார்; துறவி வைத்தார்; நல்-தவர் சேர் திருவடி என் தலைமேல் வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!. |