| 186 | செறி கழலும் திருவடியும் தோன்றும் தோன்றும்;          திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும்;   நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும்;      நெற்றிமேல் கண் தோன்றும்; பெற்றம் தோன்றும்;   மறுபிறவி அறுத்து அருளும் வகையும் தோன்றும்;         மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும்;   பொறி அரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்-       பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே. |