244 | ஏ வணத்த சிலையால் முப்புரம் எய்தான்காண்; இறையவன்காண்; மறையவன்காண்; ஈசன்தான்காண்; தூ வணத்த சுடர்ச் சூலப்படையினான்காண்; சுடர்மூன்றும் கண் மூன்றாக் கொண்டான் தான்காண்; ஆவணத்தால் என்தன்னை ஆட்கொண்டான் காண்; அனல் ஆடிகாண்; அடியார்க்கு அமிர்து ஆனான்காண்; தீவணத்த திரு உருவின் கரி உருவன்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே. |