254தேரூரார்; மாவூரார்; திங்களூரார்; திகழ்
                   புன்சடைமுடிமேல்-திங்கள்சூடி;
கார் ஊராநின்ற கழனிச் சாயல் கண் ஆர்ந்த
                   நெடுமாடம் கலந்து தோன்றும்
ஓர் ஊரா உலகுஎலாம் ஒப்பக் கூடி, “உமையாள்
                     மணவாளா!” என்று வாழ்த்தி,
“ஆரூரா! ஆரூரா!” என்கின்றார்கள்;
       அமரர்கள்தம் பெருமானே! எங்கு உற்றாயே?.