345 | திறம் பலவும் வழி காட்டிச் செய்கை காட்டிச் சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ? மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து மா முனிவர்க்கு அருள் செய்து அங்கு இருந்த நாளோ? பிறங்கிய சீர்ப் பிரமன் தன் தலை கை ஏந்திப் பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ? அறம் பலவும் உரைப்பதற்கு முன்னோ? பின்னோ? அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே. |