583 | தீக் கூரும் திருமேனி ஒரு பால், மற்றை ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர்; ஆக்கூரில்-தான் தோன்றி புகுவார் போல, அருவினையேன் செல்வதுமே, அப்பால் எங்கும் நோக்கார், ஒரு இடத்தும்; நூலும் தோலும் துதைந்து இலங்கும் திருமேனி வெண் நீறு ஆடி, வாக்கால் மறை விரித்து, மாயம் பேசி, வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே. |