| 631 | மருந்தானை, மந்திரிப்பார் மனத்து உளானை, வளர்       மதி அம் சடையானை, மகிழ்ந்து என் உள்ளத்து   இருந்தானை, இறப்பு இலியை, பிறப்பு இலானை,      இமையவர் தம் பெருமானை, உமையாள் அஞ்சக்   கருந் தான-மதகளிற்றின் உரி போர்த்தானை, கன       மழுவாள் படையானை, பலி கொண்டு ஊர் ஊர்   திரிந்தானை, திரு ஆனைக்கா உளானை,              செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே. |