670 | சீர்த்தானை; உலகு ஏழும் சிறந்து போற்றச் சிறந்தானை; நிறைந்து ஓங்கு செல்வன் தன்னை; பார்த்தானை, மதனவேள் பொடி ஆய் வீழ; பனிமதி அம் சடையானை; புனிதன் தன்னை; ஆர்த்து ஓடி மலை எடுத்த அரக்கன் அஞ்ச அருவிரலால் அடர்த்தானை; அடைந்தோர் பாவம் தீர்த்தானை; திரு நாகேச்சுரத்து உளானை; சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே. |