739 | பிறவாதும் இறவாதும் பெருகினானை, பேய் பாட நடம் ஆடும் பித்தன் தன்னை, மறவாத மனத்து அகத்து மன்னினானை, மலையானை, கடலானை, வனத்து உளானை, உறவானை, பகையானை, உயிர் ஆனானை, உள்ளானை, புறத்தானை, ஓசையானை, நறவு ஆரும் பூங்கொன்றை சூடினானை, நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே. |