| 786 | அக்கு இருந்த அரையானை, அம்மான் தன்னை,          அவுணர் புரம் ஒரு நொடியில் எரி செய்தானை,   கொக்கு இருந்த மகுடத்து எம் கூத்தன் தன்னை,            குண்டலம் சேர் காதானை, குழைவார் சிந்தை   புக்கு இருந்து போகாத புனிதன் தன்னை,       புண்ணியனை, எண்ண(அ)ரும் சீர்ப் போகம் எல்லாம்   தக்கு இருந்த தலையாலங்காடன் தன்னை,                    சாராதே சால நாள் போக்கினேனே!. |