885மட்டு மலியும் சடையார் போலும்; மாதை ஓர் பாகம் உடையார்
                                              போலும்;
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும்; காலன் தன் வாழ்நாள்
                                     கழிப்பார் போலும்;
நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும்; ஞாலம், எரி, நீர்,
                           வெளி, கால், ஆனார் போலும்;
எட்டுத் திசைகளும் தாமே போலும் இன்னம்பர்த் தான்
                                     தோன்றி ஈசனாரே.