96 | மழுங்கலா நீறு ஆடும் மார்பர் போலும்;மணி மிழலை மேய மணாளர் போலும்; கொழுங்குவளைக் கோதைக்கு இறைவர் போலும்; கொடுகொட்டி, தாளம், உடையார் போலும்; செழுங் கயிலாயத்து எம் செல்வர் போலும்; தென் அதிகைவீரட்டம் சேர்ந்தார் போலும்; அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும் - அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!. |