129 | ஆகாத நஞ்சு உண்ட அந்தி வண்ணர், ஐந்தலைய மாசுணம் கொண்டு, அம் பொன் தோள்மேல் ஏகாசமா இட்டு, ஓடு ஒன்று ஏந்தி வந்து(வ்), “இடு, திருவே, பலி!” என்றார்க்கு, இல்லே புக்கேன்; பாகு ஏதும் கொள்ளார்; பலியும் கொள்ளார்; பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கி, போகாத வேடத்தர் பூதம் சூழ, “புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே! |