40மால் ஆகி மதம் மிக்க களிறுதன்னை வதைசெய்து,
                 மற்று அதனின் உரிவை கொண்டு,
மேலாலும் கீழாலும் தோன்றா வண்ணம், வெம்
           புலால் கை கலக்க, மெய் போர்த்தானே;
கோலாலம் பட வரை நட்டு, அரவு சுற்றி,
     குரைகடலைத் திரை அலற, கடைந்து கொண்ட
ஆலாலம் உண்டு இருண்ட கண்டத்தானே;-அவன்
                 ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.