854உரு மூன்று ஆய் உணர்வின் கண் ஒன்று ஆனானை; ஓங்கார
                       மெய்ப்பொருளை; உடம்பிலுள்ளால்
கரு ஈன்ற வெங்களவை அறிவான் தன்னை; காலனைத் தன்
                      கழல் அடியால் காய்ந்து, மாணிக்கு
அருள் ஈன்ற ஆரமுதை; அமரர் கோனை; அள் ஊறி,
                    “எம்பெருமான்!” என்பார்க்கு என்றும்
திரு ஈன்ற தென் பரம்பைக்குடியில் மேய திரு
                     ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!.