88 | வெந்தார் வெண்பொடிப் பூசி, வெள்ளை மாலை விரிசடைமேல்-தாம் சூடி, வீணை ஏந்தி, கந்தாரம் தாம் முரலா, போகா நிற்க, :கறை சேர் மணிமிடற்றீர்! ஊர் ஏது?” என்றேன்; நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு, “நுடங்கு ஏர் இடை மடவாய்! நம் ஊர் கேட்கில், அம் தாமரை மலர் மேல் அளி-வண்டு யாழ் செய் ஆமாத்தூர்” என்று, அடிகள் போயினாரே. |