| 287 | பிண்டத்தைக் காக்கும் பிரானார்போலும்; பிறவி, இறவி, இலாதார்போலும்; முண்டத்து முக்கண் உடையார்போலும்; முழுநீறு பூசும் முதல்வர்போலும்; கண்டத்து இறையே கறுத்தார்போலும்; காளத்தி, காரோணம், மேயார்போலும்; அண்டத்துக்கு அப்புறம் ஆய் நின்றார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே. |