586 | கறுத்தது ஒரு கண்டத்தர்; காலன் வீழக் காலினால் காய்ந்து உகந்த காபாலி(ய்)யார்; முறித்தது ஒரு தோல் உடுத்து, முண்டம் சாத்தி, முனி கணங்கள் புடை சூழ, முற்றம் தோறும் தெறித்தது ஒரு வீணையராய்ச் செல்வார்; தம் வாய்ச் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ, மறித்து ஒரு கால் நோக்காதே, மாயம் பேசி, வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே. |