864பித்தன் காண்; தக்கன் தன் வேள்வி எல்லாம் பீடு அழியச் சாடி,
                                       அருள்கள் செய்த
முத்தன் காண்; முத்தீயும் ஆயினான் காண்; முனிவர்க்கும்
                          வானவர்க்கும் முதல் ஆய் மிக்க
அத்தன் காண்; புத்தூரில் அமர்ந்தான் தான் காண்; அரிசில்
                          பெருந்துறையே ஆட்சி கொண்ட
சித்தன் காண்; சித்தீச்சுரத்தான் தான் காண்; சிவன் அவன்
                     காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.