Try error :java.sql.SQLException: Closed Resultset: next
903கார் முகில் ஆய்ப் பொழிவானை, பொழிந்த முந்நீர்
              கரப்பானை, கடிய நடை விடை ஒன்று ஏறி
ஊர் பலவும் திரிவானை, ஊர் அது ஆக ஒற்றியூர்
                         உடையனாய் முற்றும் ஆண்டு
பேர் எழுத்து ஒன்று உடையானை, பிரமனோடு
             மாலவனும் இந்திரனும் மந்திரத்தால் ஏத்தும்
சீர் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை,
                   சென்று அடையப் பெற்றேன், நானே.