Try error :java.sql.SQLException: Closed Resultset: next
967“மூ உருவில் முதல் உருவாய், இரு-நான்கு ஆன
              மூர்த்தியே!” என்று முப்பத்து மூவர்-
"தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும்
        செம்பவளத் திருமேனிச் சிவனே!” என்னும்
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே;
       நாவல் அம் தீவு அகத்தினுக்கு நாதர் ஆன
காவலரே ஏவி விடுத்தாரேனும், கடவம் அலோம்;
                 கடுமையொடு களவு அற்றோமே.