16 | காது ஆர் குழையினர்; கட்டங்கத்தர்; கயிலாயமாமலையார்; காரோணத்தார்; மூதாயர் மூதாதை இல்லார் போலும்; முதலும் இறுதியும் தாமே போலும்; மாது ஆய மாதர் மகிழ, அன்று, வன் மத வேள் தன் உடலம் காய்ந்தார்-இந்நாள் போது ஆர் சடை தாழப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே. |