16காது ஆர் குழையினர்; கட்டங்கத்தர்;
               கயிலாயமாமலையார்; காரோணத்தார்;
மூதாயர் மூதாதை இல்லார் போலும்; முதலும் இறுதியும்
                                 தாமே போலும்;
மாது ஆய மாதர் மகிழ, அன்று, வன் மத வேள் தன்
                       உடலம் காய்ந்தார்-இந்நாள்
போது ஆர் சடை தாழப் பூதம் சூழ, புலியூர்ச்
                      சிற்றம்பலமே புக்கார் தாமே.