Try error :java.sql.SQLException: Closed Resultset: next
297முத்தினை, மணிதன்னை, மாணிக்கத்தை, மூவாத
                 கற்பகத்தின் கொழுந்து தன்னை,
கொத்தினை, வயிரத்தை, கொல் ஏறு ஊர்ந்து
     கோள் அரவு ஒன்று ஆட்டும் குழகன்தன்னை,
பத்தனை, பத்தர் மனத்து உளானை, பரிதி
             போல்-திருமேனி உடையான்தன்னை,
அத்தனை, ஆரூரில் அம்மான்தன்னை,-அறியாது
                  அடிநாயேன் அயர்த்த ஆறே!.