297 | முத்தினை, மணிதன்னை, மாணிக்கத்தை, மூவாத கற்பகத்தின் கொழுந்து தன்னை, கொத்தினை, வயிரத்தை, கொல் ஏறு ஊர்ந்து கோள் அரவு ஒன்று ஆட்டும் குழகன்தன்னை, பத்தனை, பத்தர் மனத்து உளானை, பரிதி போல்-திருமேனி உடையான்தன்னை, அத்தனை, ஆரூரில் அம்மான்தன்னை,-அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!. |