571 | மேல் வைத்த வானோர் பெருமான், போற்றி! மேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய், போற்றி! சீலத்தான் தென் இலங்கை மன்னன் போற்றிச் சிலை எடுக்க, வாய் அலற வைத்தாய், போற்றி! கோலத்தால் குறைவு இல்லான் தன்னை, அன்று, கொடிது ஆகக் காய்ந்த குழகா, போற்றி! காலத்தால் காலனையும் காய்ந்தாய், போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. |