155 | துடி ஆம்; துடியின் முழக்கம் தான் ஆம்; சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம்; படிதான் ஆம்; பாவம் அறுப்பான் ஆகும்; பால் நீற்றன் ஆம்; பரஞ்சோதிதான் ஆம்; கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும்; கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும் கடியான் ஆம்; காட்சிக்கு அரியான் ஆகும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைத்தானே. |