Try error :java.sql.SQLException: Closed Resultset: next
139தோடு ஏறும் மலர்க்கொன்றை சடைமேல் 
   வைத்தார்; துன் எருக்கின்வடம் வைத்தார்; துவலை சிந்த,
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார்;
      பனிமத்தமலர் வைத்தார்; பாம்பும் வைத்தார்;
சேடு ஏறு திருநுதல் மேல் நாட்டம் வைத்தார்; சிலை
        வைத்தார்; மலை பெற்ற மகளை வைத்தார்;
நாடு ஏறு திருவடி என் தலைமேல்
   வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.