Try error :java.sql.SQLException: Closed Resultset: next
587பட்டு உடுத்து, பவளம் போல் மேனி எல்லாம்
     பசுஞ்சாந்தம் கொண்டு அணிந்து, பாதம் நோவ
இட்டு எடுத்து நடம் ஆடி, இங்கே வந்தார்க்கு,
      “எவ் ஊரீர், எம்பெருமான்?” என்றேன்; ஆவி
விட்டிடும் ஆறு அது செய்து, விரைந்து நோக்கி,
              வேறு ஓர் பதி புகப் போவார் போல,
வட்டணைகள் பட நடந்து, மாயம் பேசி,
           வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.