Try error :java.sql.SQLException: Closed Resultset: next
759கரு மருவு வல்வினை நோய் காற்றினான் காண்,
             கா மரு பூங் கச்சி ஏகம்பத்தான் காண்,
பெரு மருவு பேர் உலகில் பிணிகள் தீர்க்கும்
        பெரும்பற்றத் தண்புலியூர் மன்று ஆடீ காண்,
தரு மருவு கொடைத் தடக்கை அளகைக்கோன்
         தன் சங்காத்தி, ஆரூரில்-தனி யானை காண்
திரு மருவு பொழில் புடை சூழ் திருப் புத்தூரில்-
    திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.