| 784 | மாலைப் பிறை சென்னி வைத்தார் தாமே;              வண் கயிலை மா மலையை வந்தியாத,   நீலக் கடல் சூழ், இலங்கைக் கோனை                நெரிய விரலால் அடர்த்தார் தாமே;   பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே;                   பழனை பதியா உடையார் தாமே;   சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே திரு               ஆலங்காடு உறையும் செல்வர் தாமே. |