106 | கல் ஊர் கடி மதில்கள் மூன்றும் எய்தார்; காரோணம் காதலார்; காதல்செய்து நல்லூரார்; ஞானத்தார்; ஞானம் ஆனார்; நால்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்; மல் ஊர் மணி மலையின்மேல் இருந்து, வாள் அரக்கர்கோன் தலையை மாளச் செற்று, பல் ஊர் பலி திரிவார்; பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. |