236மூரி முழங்கு ஒலி நீர் ஆனான் கண்டாய்;
      முழுத்தழல் போல் மேனி முதல்வன் கண்டாய்;
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்; இன்
        அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய்;
ஆரியன் கண்டாய்; தமிழன் கண்டாய்;
       அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய்;
வாரி மத களிறே போல்வான்
   கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.