683எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை, ஏறு
             ஊர்ந்த பெம்மானை, “எம்மான்!” என்று
பத்தனாய்ப் பணிந்த(அ)டியேன் தன்னைப் பல்-நாள்
                   பாமாலை பாடப் பயில்வித்தானை,
முத்தினை, என் மணியை, மாணிக்கத்தை, முளைத்து
            எழுந்த செம்பவளக் கொழுந்து ஒப்பானை,
சித்தனை, என் திரு முதுகுன்று உடையான்
    தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.