683 | எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை, ஏறு ஊர்ந்த பெம்மானை, “எம்மான்!” என்று பத்தனாய்ப் பணிந்த(அ)டியேன் தன்னைப் பல்-நாள் பாமாலை பாடப் பயில்வித்தானை, முத்தினை, என் மணியை, மாணிக்கத்தை, முளைத்து எழுந்த செம்பவளக் கொழுந்து ஒப்பானை, சித்தனை, என் திரு முதுகுன்று உடையான் தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!. |