877 | வார் கெழுவு முலை உமையாள் வெருவ அன்று மலை எடுத்த வாள் அரக்கன் தோளும் தாளும் ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து, மீண்டே இன் இசை கேட்டு இருந்தானை; இமையோர் கோனை; பார் கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாட, பைம்பொழில் சேர்தரும், ஓமாம்புலியூர் மன்னும் சீர் கெழுவு வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!. |