Try error :java.sql.SQLException: Closed Resultset: next
742ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை; ஆல்
    அதன் கீழ் அறம் நால்வர்க்கு அருள்செய்தானை;
பால் ஆகி, தேன் ஆகி, பழமும் ஆகி, பைங்கரும்பு
           ஆய், அங்கு அருந்தும் சுவை ஆனானை,
மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி,
        வேள்வியினின் பயன் ஆய விமலன் தன்னை;
நால் ஆய மறைக்கு இறைவன் ஆயினானை;
             நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.