855 | பார் முழுது ஆய் விசும்பு ஆகிப் பாதாளம்(ம்) ஆம் பரம்பரனை; சுரும்பு அமரும் குழலாள் பாகத்து ஆர் அமுது ஆம் அணி தில்லைக் கூத்தன் தன்னை; வாட்போக்கி அம்மானை; “எம்மான்!” என்று வாரம் அது ஆம் அடியார்க்கு வாரம் ஆகி, வஞ்சனை செய்வார்க்கு என்றும் வஞ்சன் ஆகும் சீர் அரசை; தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!. |