867 | வெய்யவன் காண்; வெய்ய கனல் ஏந்தினான் காண்; வியன் கெடில வீரட்டம் மேவினான் காண்; மெய்யவன் காண்; பொய்யர் மனம் விரவாதான் காண்; வீணையோடு இசைந்து மிகு பாடல் மிக்க கையவன் காண்; கையில் மழு ஏந்தினான் காண்; காமன் அங்கம் பொடி விழித்த கண்ணினான் காண்; செய்யவன் காண்; செய்யவளை மாலுக்கு ஈந்த சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே. |