938 | குலம் பொல்லேன்; குணம் பொல்லேன்; குறியும் பொல்லேன்; குற்றமே பெரிது உடையேன்; கோலம் ஆய நலம் பொல்லேன்; நான் பொல்லேன்; ஞானி அல்லேன்; நல்லாரோடு இசைந்திலேன்; நடுவே நின்ற விலங்கு அல்லேன்; விலங்கு அல்லாது ஒழிந்தேன் அல்லேன்; வெறுப்பனவும் மிகப் பெரிதும் பேச வல்லேன்; இலம் பொல்லேன்; இரப்பதே ஈய மாட்டேன்; என் செய்வான் தோன்றினேன், ஏழையேனே?. |