899பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானை, பசுபதியை, பாசுபத
                                      வேடத்தானை,
விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை, வேதியனை,
                         விண்ணவனை, மேவி வையம்
அளந்தவனை, நான்முகனை, அல்லல் தீர்க்கும் அருமருந்தை,
                       ஆம் ஆறு அறிந்து என் உள்ளம்
தெளிந்து எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை,
                      சென்று அடையப் பெற்றேன், நானே.