26ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார்;
           உயர்கதிக்கு வழி தேடிப் போகமாட்டார்;
வரு பிறப்பு ஒன்று உணராது, மாசு பூசி, வழி
            காணாதவர் போல்வார் மனத்தன் ஆகி,
அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகை ஊரன் அம்மான்
           தன் அடி இணையே அணைந்து வாழாது,
இருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு-
           ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!