588“பல்லார் பயில் பழனப் பாசூர்” என்று, பழனம்
                பதி பழைமை சொல்லி நின்றார்;
“நல்லார் நனி பள்ளி இன்று வைகி, நாளைப் போய்,
                   நள்ளாறு சேர்தும்” என்றார்;
சொல்லார், ஒரு இடமா; தோள் கை வீசி, சுந்தரராய்,
                     வெந்த நீறு ஆடி, எங்கும்
மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி
         வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.