760காம்பு ஆடு தோள் உமையாள் காண, நட்டம்
    கலந்து ஆடல் புரிந்தவன் காண்; கையில் வெய்ய
பாம்பு ஆட, படுதலையில் பலி கொள்வோன் காண்;
     பவளத்தின் பருவரை போல் படி மத்தான் காண்;
தாம்பு ஆடு சின விடையே பகடாக் கொண்ட
   சங்கரன் காண்; பொங்கு அரவக்கச்சையோன் காண்
சேம்பு ஆடு வயல் புடை சூழ் திருப் புத்தூரில்-
     திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.