274பொங்கு மதமானமே! ஆர்வச் செற்றக்-குரோதமே!
                  உலோபமே! பொறையே! நீங்கள்
உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம்
   உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே? யானேல்,
அம் கமலத்து அயனொடு மால் ஆகி, மற்றும்
     அதற்கு அப்பால் ஒன்று ஆகி, அறிய ஒண்ணாச்
செங்கனகத் தனிக் குன்றை, சிவனை, ஆரூர்ச்
   செல்வனை, சேர்வேன்; நும்மால் செலுத்துணேனே!.