338ஒப்பு ஒருவர் இல்லாத ஒருவன் தன்னை, ஓத்தூரும்
                              உறையூரும் மேவினானை,
வைப்பு அவனை, மாணிக்கச் சோதியானை,
                 மாருதமும் தீ வெளி நீர் மண் ஆனானை,
மெய்ப் பொருள் ஆய் அடியேனது உள்ளே நின்ற
                  வினை இலியை, திரு மூலட்டானம் மேய
அப் பொன்னை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து
              அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.